நம்ம எல்லோருக்குமே நம்ம ஊருலே கிடைக்குற விஷயத்தை அடுத்தவன் சொன்னாதான் தெரியும் அது மாதிரி இல்லாம கடலைமிட்டாய் நம்ம வாழ்க்கையில கலந்த விஷயம்...
நம்ம ஊரு பக்கம் இருந்து வெளியே போய் வேலை பார்க்குற எல்லோருமே நம்ம ஊரு பக்கம் வந்தா மறக்காம வாங்கிட்டு போற பண்டம் கடலைமிட்டாய் தான்..
கடலைமிட்டாய்கான செய்முறை ரொம்ப லேசு இந்த ஊரு பக்கம் விளையுற கடலை, வெல்லம் அப்புறமா கொஞ்சம் ஏலக்காய் (இது மட்டும் நம்ம சேட்டங்க உபயம்)..கூடவே நல்ல கனமான இரும்பு சட்டி நல்ல தணல் அடுப்பு...
கடலைய நல்ல வறுத்துட்டு வெல்லம் சேர்த்து அடி பிடிக்காம இரும்பு சட்டில சன்னமான நெருப்புல ஒரு ரெண்டு மூணு மணி நேரம் கிளறினா...கோவில்பட்டி கடலைமிட்டை தயார்...சொல்ல ரொம்ப லேசா தான் இருக்கும் மக்கா ஆனா செஞ்சா தான் கஷ்டம் தெரியும்...
கடலைமிட்டாய் பக்குவம் ரொம்ப முக்கியம்..அது இங்க குறிப்பிட்ட ஒரு நாலு அஞ்சு குடும்பத்துகிட்டதான் இருக்கு...
பெங்காலி ஸ்வீட்,கேக், மில்க் ஸ்வீட் இப்படி என்ன தான் வந்தாலும் கோவில்பட்டி கடலைமிட்டாய்ய அடிச்சுக்கிட இன்னொரு ஸ்வீட் வரவே இல்ல...
எப்பவும் நான் ஊருக்கு போறேன்னு தெரிஞ்ச உடனே எங்க ஆபீஸ்ல இருந்து ஒரு நாலு அஞ்சு பேராவது கடலைமிட்டாய் வாங்கிட்டு வர சொல்லுவாங்க... (இத்தனைக்கும் எங்க கம்பெனி ஒரு சாப்ட்வேர் கம்பெனிங்கோ...)
எத்தனை எடத்துலே சாப்பிட்டாலும் அம்மா கையாலே சாப்பிட்ட மாதிரி வருமா..
அது மாதிரிதான் எந்த கடலைமிட்டாய்...
எளிமை தான் மக்க நம்ம ஊரு பெருமை...
கடலைமிட்டாய் பத்தி நம்ம சின்ன வயசு அனுபவம் தான் அடுத்த போஸ்ட்...
Friday, October 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment